மேலும் கோட்டுவாத்தியம்,வயலின்,புல்லாங்குழல், வாய்ப்பாட்டு ஆகியவற்றிலும் தேர்ச்சிபெற்றவர்களும் இருந்தன்r. அக்கிரகாரத்தின் இரண்டு தெருக்களிலும் இரண்டிரண்டு வரிசையில் வீடுகள். மேலத்தெருவின் மேல வரிசை வீடுகளின் பின்புறம் சிறிய பாசன வாய்க்கால் ஓடும். அந்த வீடுகளின் பின் வரிசை முழுவதும் தென்னை, மா பொன்று மரங்களும், செடி,கொடிகளும் நிறைந்து நன்றாக இருக்கும். கோயிலிலும் வரதராஜப் பெருமாள் கோயிலிலும் திருவிழா தேரோட்டம் எல்லாம் உண்டு.பத்து நாட்க்ள் திருவீதி உலா இருக்கும். வருடத்தில் ஒரு நாள் சிவனும் வீதி உலா வருவார். குளத்தில் பதினோரு மாதங்கள் தண்ணீர் இருக்கும்.ஒரு மாதம் தண்ணீர் இருக்காது. அந்த ஒரு மாதத்தில் தூரெடுத்து குளத்தை ஆழப்படுத்தி புது நீர் வரவுக்கு ஒழுங்கு படுத்தி வைப்பார்கள்.சரியாக மே மாதம் ஒன்றாம் தேதி கன்னடியன் வாய்க்காலில் புது வெள்ளம் பாய்ந்து வரும்.ஊருக்கு சற்று தூரத்தில் தாமிரபரணி ஆறு ஓடுகிறது.
எங்கள் ஊர் அருகில் புதுக்குடி என்ற்சிறிய கிராமம் இருக்கிறது.இங்கு தரமான மண் பாண்டங்களும் செங்கற்கலும் கிடைக்கும்.பக்கத்திளுள்ள பத்தமடை பாய் தயாரிப்பில் பிரசித்தி பெற்றது. வீரவநல்லூர், வேஷ்டிகள்,துண்டுகள் தயாரிப்பில் பெயர் வாய்ந்தது.
இப்பொழுது சமீபத்தில் சென்றபோது ஊரில் நிறைய மாற்றம் தெரிந்தது. மண்தெரு சிமெண்ட் சாலையாக மாறியிருந்தது. தாமிரபரமி தண்ணீர் குழாயில் ஊருக்குள் வந்து விட்டது. அக்ரஹாரத்தில் அந்தணர்கலளே இல்லை எனலாம்.காலம் மாறிக்கொண்டிருக்கிறது.
(முடிந்தது.)
Thursday, October 28, 2010
எங்கள் ஊர் - காருகுறிச்சி.
மேலத்தெருவிலும்,கீழத்தெருவிலும் இரு வரிசைகளில் வீடுகள் அமைந்துள்ளன. எங்கள் ஊரில் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் இருக்கிறது. எங்கள் ஊருக்கு பல பெருமைகளுண்டு. வைணவர்கலின் புனித இடமான அகோபில பீடத்தை எங்கள் ஊரிலிருந்து இரு அழகியசிங்கர்கள்(குருமர்கள்) அல்ங்கரித்திருக்கிறார்கள்.
பெயரும் புகழும் பெற்ற நாதஸ்வர வித்வான் திரு. அருணாசலம். வருடத்திற்கு ஒருமுறை மலை மேலிருக்கும் முருகப் பெருமான் வீதி உலா வருவார். ஊருக்குள் வரும் போது இரவுநெடுநேரம்ஆகிவடு.கரகாட்டம்,மயிலாட்டம் எல்லாமிருக்கும்.எல்லவற்றையும் விட முக்கியமான ஒன்று காருகுறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரக் கச்சேரி. இரவு என்நேரமானாலும் மலையிலிருந்து முருகப்பெருமானுடன் கூடவே நடந்து நாதஸ்வரம் வாஸ்த்து வருவார். எங்கள் ஊர் பல்லித் தலைமை ஆசிரியர் சங்கீத ஞானமிக்கவர். அவர் வீட்டு வாயிலிலும் இன்னும் சில முக்கிய மனிதர்கள் வீடுகளின் முன்பும் அமர்ந்து சிறிது நேர்ம் நாதஸ்வரக் கச்சேரி செய்வார்.
தொடரும்.
பெயரும் புகழும் பெற்ற நாதஸ்வர வித்வான் திரு. அருணாசலம். வருடத்திற்கு ஒருமுறை மலை மேலிருக்கும் முருகப் பெருமான் வீதி உலா வருவார். ஊருக்குள் வரும் போது இரவுநெடுநேரம்ஆகிவடு.கரகாட்டம்,மயிலாட்டம் எல்லாமிருக்கும்.எல்லவற்றையும் விட முக்கியமான ஒன்று காருகுறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரக் கச்சேரி. இரவு என்நேரமானாலும் மலையிலிருந்து முருகப்பெருமானுடன் கூடவே நடந்து நாதஸ்வரம் வாஸ்த்து வருவார். எங்கள் ஊர் பல்லித் தலைமை ஆசிரியர் சங்கீத ஞானமிக்கவர். அவர் வீட்டு வாயிலிலும் இன்னும் சில முக்கிய மனிதர்கள் வீடுகளின் முன்பும் அமர்ந்து சிறிது நேர்ம் நாதஸ்வரக் கச்சேரி செய்வார்.
தொடரும்.
engal oor-karukurichi.
குளற்று நீர் பாசனத்திற்கும் மற்ற உப்யோகங்களுக்கும் உதவி வருகிறது. வளமான வயல்களில், ஆனைக்கொம்பன்,சம்பா நெற்பயிர்கள் செழித்து வளர்ந்தன. வயல்களில் நெல் அறுவடை ஆனதும் சாக்கு மூட்டைகளில் எடுத்து வந்து நில சொந்தக்காரர் வீட்டு வாயிலில் கொட்டி மரக்கால் அள்வையால் அள்ந்து எடுத்துச் சென்று கலஞ்சியத்தில் கொட்டுவார்கள்." காந்தி மதி யாம், ரெண்டுயாம்"என்று ராகத்துடன் நெல்லை அளப்பதை கேட்க இனிமையாக இருக்கும். எண்ணீக்கையை ஆரம்பிக்கையில் ஒன்று என்று சொல்லாமல் காந்திமதி அம்மன் பெயரைச் சொல்லுவார்கள்
(thodarum.)
Wednesday, October 27, 2010
engal oor-karukurichi.
மேலத்தெருவின் வடகோடியில் பள்ளீக்கூடம். மெல் நடுனிலைப்பள்ளி. எட்டாவதுவகுப்பு வரை இங்கு படிக்கலாம். அதற்குப் பிறகு மேல் படிப்புக்குப் பத்தமடைபக்கோ,வீரவநல்லூருக்கோதான். போகவேண்டும். கல்லூரிக்குத் திருநெல்வேலிக்குத்தான் போகவேண்டும். மேலத்தெருவின் தெற்க்குக்கோடியில் குளம். குளத்திற்கு எதிர் கரையில் சற்று தூரம் சென்றால் மலை. "கொழுந்திருந்தான் மலை". மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதி இது. எங்கள் ஊர் மலை,வாய்க்கால், குளம் ஆகியவற்றிற்கு ஒரு வரலாறூ உண்டு. அனுமன் ஔஷத மலையை இலங்கைக்கு எடுத்துச்சென்றபோது விழுந்த ஒரு சிறிய கல்தான் இந்த கொழுந்திருந்தான் மலையாம்! அதற்கேற்றபடி இந்த மலையில் இப்பொழுதும் மூலிகை மருந்துகள் கிடைக்கின்றன! கன்னடியன் என்ற பெயருடைய குறுனில மன்னர் மக்களின் நலனுக்காக குள்ங்கள் வெட்ட நினைத்தபோது அவரின் கனவில் அவர் ஒரு பசுவின்வாலைப் பிடித்துக்கொண்டு அந்தப் பசு எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் பின் தொடர்ந்து செல்வதுபோல் தெரிந்ததாம்.பசு சென்ற் வழியில் அது சில இடங்களில் படுத்து பிறகு எழுந்து சென்று ஒரு இடத்தில் மறைந்து விட்டதாம்! பசு போன வழியெல்லாம் வாய்க்காலும் படத்த இடங்களில் குள்ங்களும் வெட்டும்படி கனவில் தோன்றியதால் மன்னரும் அதுபோலவே செய்தாராம்.அவர் பெயரால் கன்னடியன் வாய்க்கால்,கன்னடியன் குள்ம் என்று இன்றும் வழங்கி வருகிறது! (thodarum)
Tuesday, October 26, 2010
எங்கள் ஊர் -காருகுறிச்சி.
திருநெல்வெலி மவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் காருகுறிச்சிதான் எங்கள் ஊர்.நான் சிறுவனாக இருந்தபொது இருந்த காருகுறிச்சியைப் பற்றித்தான் சொல்லப்பொகிறேன்.அழகிய சிறிய ஊர்.ஊருக்குள் நுழைந்தவுடன் குடியானவர்கள் வசிக்கும் பகுதி.உள்ளே வந்தால் கன்னடியன் வாய்க்காலும் குளமும்.அதைத்தாண்டி வந்தால் வட்க்கு தெற்க்காக இறண்டு தெருக்கள்.ஒன்று கிழக்குத்தெரு.மற்றொன்று மேற்க்குத்தெரு.இதுதான் அக்கிரகாரப் பகுதி.எங்கள் வீடு மேற்க்குத் தெருவில்தான் இருந்தது. ஊரைச்சுற்றி பசுமையான் வயல்கள். வயல்களுக்கு நடுவில்,குளக்கரையில் சாஸ் தா ங்கொவில். அந்தக்க்ரைமேலே யே மேற்கு நோக்கி நடந்தால் வீரவனல்லூருக்குப் போகலாம். மேலத் தெருவில் நுழைந்தவுடன் கிருஷ்ணன் கோவில்.மேலத்தெருவின் தெற்க்குப் பகுத்க்கும் வடக்குப் பகுதிகும் இடையில் வரதராஜப் பெருமாள் கோவில். எதிரேயுள்ள குறுக்குச் சந்தில் போனால் சிவன் கோவிலுக்குப் போகலாம்.
(தொடரும்)
(தொடரும்)
Sunday, October 24, 2010
ஒரு தேடலின் தொடர்.
எதிர் வீட்டு மாடியில் ஒரு ஜோடி சிட்டுக் குருவிகளைக் கண்டு சந்தோஷமாக இருந்தது.அவை இரண்டும் அடிக்கடி பறந்து வந்து பக்கத்து வீட்டில் காக்கைக்கு வைத்திருக்கும் உணவை எடுத்துச் செல்லும்.இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம்.அவை கூடு கட்டி குஞ்சு பொரித்ததுவோ என்னவோ தெரியவில்லை.ஆனால் அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்கும்.சிறிது காலத்திற்கு பிறகு அந்த ஜோடிக் குருவிகளைக் காணவில்லை.அப்புறம் வரவேயில்லை.எங்கு போயிற்றோ, என்னவானதோ தெரியவில்லை.பெறு நகரப் பேரிரைச்சலில் குருவிகள் காணாமல் போய்விட்டனவோ?செல் போன் கோபுரங்களில்ருந்து வெளியாகும் மின் அலைகளின் தாக்கத்தால் குருவிகள் வெகுவாக பாதிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. முன்னேற்றம் என்ற பெயரில் நாம் அடைவது கொஞ்சமாகவும் இழப்பது அதிகமாகவும் இருந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் கூட இப்போதெல்லாம் செல்போன் கோபுரங்களும் டிவி அன்ட்டேன்னாக்களும் நிறையவே வந்துவிட்டன.எல்லா இடங்களிலும் குருவிகள் மட்டுமல்லாமல் இன்னும் என்னென்ன அழிவுகள் காத்திருக்கின்றனவோ?
ஒரு தேடல்.
ஒரு மாலை வேளை.ஏதோ நினைப்பில் இருந்தபோது "கீச் கீச் என்ற் சப்தம் கேட்டது .ஓடிச் சென்று பார்த்தல் அங்கே அது இல்லை.ஒரு கைபேசியின் டயல் டோன் சப்தம்தான் அது. அந்த இனிமையான,உற்சகமான,கல கலப்பான குரலைக் கேட்டு எத்தனை காலமாகிவிட்டது.எங்கே போய்விட்டன இந்த சிட்டுக்குருவிகள்!
நான் முதல் முதலாக சிட்டுக்குருவிகளை கவனிக்கத் தொடங்கியது பத்தாவது வயதில்.அப்பொழுது நாங்கள் பாளையம்கோட்டையில் இருந்தோம் நாங்கள் குடயிருந்த வீடு ஒரு அழகான சிரிய டுப்ளெக்ஸ் மாடல் வீடு.கீழ் பகுதியில் நாங்கள் குடி இருந்தோம்.மாடி காலியாகத்தான் இருந்தது. மாடியில் நிறைய ஜன்னல்கள் இருந்ததால் வெளிச்சமாக இருக்கும்.திறந்திருக்கும் ஜன்னல்கள் வழியாக நிறைய குருவிகள் உள்ளே வந்துவிடும். ஒரே கூச்சல்,கும்மாளம்தான்.ஜோடி ஜோடியாக கூடு கட்டிக் குடியிருக்க போட்டி, சண்டை! நாள் முழுவத்ம் மாலை மங்கும் வரை அவைகளின் கல கலப்பான பெரிரைச்சல்தன். நாங்கள் அந்த கோபாலக்ருஷ்ண பெருமாள் கோயில் தெருவில் இருந்தவரை அந்த இனிமையான தொல்லையை மிகவும் ரசித்தோம்.வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் குருவிகள் என் கவனத்தை eerththat நாங்கள் ஹைதராபாத்தில் aththilஇருந்தபோது.கோடைகாலம் வந்து விட்டால் எங்கிருந்தோ ஒரு ஜோடி. இனிய பெருங்குரல் எடுத்து உற்ச்சாகமாய் கத்திக்கொண்டு வந்துவிடும்.எங்கள் வீட்டு மின் விசிறியின் மேல் கோப்பையில் குடியிருக்க இடம் தேடி வட்டமிடும்.
ஒரு வசந்த கால காலை வேளையில் அந்தத் துயர சம்பவம் .நேரிட்டது
ஆசையாகக் கூடு கட்ட வேகமாக பறந்து வந்த பெண் குருவி சுழன்றுகொண்டிருந்த மின் விசிறியில் அடிபட்டு துடிதுடித்துpவிழுந்தது.நாங்கள் எதுவும் செய்யுமுன்னரே அது irandhuvittathu. அன்றையப்பொழுது எங்களுக்கு மிகத் துன்பமாகக் கழிந்தது.
நாங்கள் சென்னை கிண்டியில் எங்கள் சொந்த வீட்டிற்கு குடி வந்தபோது ஒரு ஜோடி குருவிகள் எதிர் வீட்டு மாடியில் kudiyiruppadhaik kandom. mikavm makhzhchchiyaka irundhadhu.
thodarum.
நான் முதல் முதலாக சிட்டுக்குருவிகளை கவனிக்கத் தொடங்கியது பத்தாவது வயதில்.அப்பொழுது நாங்கள் பாளையம்கோட்டையில் இருந்தோம் நாங்கள் குடயிருந்த வீடு ஒரு அழகான சிரிய டுப்ளெக்ஸ் மாடல் வீடு.கீழ் பகுதியில் நாங்கள் குடி இருந்தோம்.மாடி காலியாகத்தான் இருந்தது. மாடியில் நிறைய ஜன்னல்கள் இருந்ததால் வெளிச்சமாக இருக்கும்.திறந்திருக்கும் ஜன்னல்கள் வழியாக நிறைய குருவிகள் உள்ளே வந்துவிடும். ஒரே கூச்சல்,கும்மாளம்தான்.ஜோடி ஜோடியாக கூடு கட்டிக் குடியிருக்க போட்டி, சண்டை! நாள் முழுவத்ம் மாலை மங்கும் வரை அவைகளின் கல கலப்பான பெரிரைச்சல்தன். நாங்கள் அந்த கோபாலக்ருஷ்ண பெருமாள் கோயில் தெருவில் இருந்தவரை அந்த இனிமையான தொல்லையை மிகவும் ரசித்தோம்.வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் குருவிகள் என் கவனத்தை eerththat நாங்கள் ஹைதராபாத்தில் aththilஇருந்தபோது.கோடைகாலம் வந்து விட்டால் எங்கிருந்தோ ஒரு ஜோடி. இனிய பெருங்குரல் எடுத்து உற்ச்சாகமாய் கத்திக்கொண்டு வந்துவிடும்.எங்கள் வீட்டு மின் விசிறியின் மேல் கோப்பையில் குடியிருக்க இடம் தேடி வட்டமிடும்.
ஒரு வசந்த கால காலை வேளையில் அந்தத் துயர சம்பவம் .நேரிட்டது
ஆசையாகக் கூடு கட்ட வேகமாக பறந்து வந்த பெண் குருவி சுழன்றுகொண்டிருந்த மின் விசிறியில் அடிபட்டு துடிதுடித்துpவிழுந்தது.நாங்கள் எதுவும் செய்யுமுன்னரே அது irandhuvittathu. அன்றையப்பொழுது எங்களுக்கு மிகத் துன்பமாகக் கழிந்தது.
நாங்கள் சென்னை கிண்டியில் எங்கள் சொந்த வீட்டிற்கு குடி வந்தபோது ஒரு ஜோடி குருவிகள் எதிர் வீட்டு மாடியில் kudiyiruppadhaik kandom. mikavm makhzhchchiyaka irundhadhu.
thodarum.
Subscribe to:
Posts (Atom)