Thursday, October 28, 2010

எங்கள் ஊர் - காருகுறிச்சி.

மேலத்தெருவிலும்,கீழத்தெருவிலும் இரு வரிசைகளில் வீடுகள் அமைந்துள்ளன. எங்கள் ஊரில் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் இருக்கிறது. எங்கள் ஊருக்கு பல பெருமைகளுண்டு. வைணவர்கலின் புனித இடமான அகோபில பீடத்தை எங்கள் ஊரிலிருந்து இரு அழகியசிங்கர்கள்(குருமர்கள்) அல்ங்கரித்திருக்கிறார்கள்.
பெயரும் புகழும் பெற்ற நாதஸ்வர வித்வான் திரு. அருணாசலம். வருடத்திற்கு ஒருமுறை மலை மேலிருக்கும் முருகப் பெருமான் வீதி உலா வருவார். ஊருக்குள் வரும் போது இரவுநெடுநேரம்ஆகிவடு.கரகாட்டம்,மயிலாட்டம் எல்லாமிருக்கும்.எல்லவற்றையும் விட முக்கியமான ஒன்று காருகுறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரக் கச்சேரி. இரவு என்நேரமானாலும் மலையிலிருந்து முருகப்பெருமானுடன் கூடவே நடந்து நாதஸ்வரம் வாஸ்த்து வருவார். எங்கள் ஊர் பல்லித் தலைமை ஆசிரியர் சங்கீத ஞானமிக்கவர். அவர் வீட்டு வாயிலிலும் இன்னும் சில முக்கிய மனிதர்கள் வீடுகளின் முன்பும் அமர்ந்து சிறிது நேர்ம் நாதஸ்வரக் கச்சேரி செய்வார்.
தொடரும்.

No comments:

Post a Comment